இனவாதம், இஸ்லாமோபோபியாவுக்கு காரணம் மக்களின் அறியாமை. வேற்றினத்தவருடன் கலந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தால் தப்பெண்ணம் விலகும் என்பதை விளக்கும் செய்திக் கட்டுரை ஒன்று The New York Times (21 September 2019) இல் பிரசுரமாகியுள்ளது. மனிதநேயம் உள்ள சாதாரண மக்கள் "எதிரி" இனத்தவருடனும் நட்புடன் பழகுவார்கள். இதற்கு உதாரணமாக முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஒரு கிராமம் நடைமுறையில் நிரூபித்துக் காட்டியுள்ளது. 2015 ம் ஆண்டு ஜேர்மனியில் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள கொல்ஸோவ் (Golzow) கிராமத்தில் 16 சிரிய அகதிக் குடும்பங்கள் குடியமர்த்தப் பட்டன. ஆரம்ப காலங்களில் இருந்த சந்தேகங்கள், அவநம்பிக்கைகள் மறைந்து, தற்போது அங்கு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். கடந்த தேர்தல்களில் கொல்ஸோவ் கிராமவாசிகளில் நான்கில் ஒருவர், அகதிகள், இஸ்லாமியருக்கு எதிரான இனவாதம் பேசும் AfD கட்சிக்கு வாக்களித்தனர். அதற்காக அந்த மக்கள் "இனவாதிகள்" என்று அர்த்தமல்ல. அரசியல் வேறு, யதார்த்தம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA.