முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகிஸ்தானில் சீன முதலீடுகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள்


பாகிஸ்தானில் குவாட‌ர் துறைமுக‌ ந‌க‌ர‌த்தில் உள்ள‌ Pearl Continental எனும் ஆடம்பர ஹொட்டேலில், இம்மாத‌ம் ந‌ட‌ந்த‌ (ப‌ய‌ங்க‌ர‌வாத‌) துப்பாக்கிச் சூட்டுத் தாக்குத‌லில் ஒரு க‌ட‌ற்ப‌டையின‌ர் உட்ப‌ட‌ 5 பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். ப‌லுசிஸ்தான் விடுத‌லை இய‌க்க‌த்தின் (BLA) ம‌ஜீத் அணி தாக்குத‌லுக்கு உரிமை கோரியுள்ள‌து.

அதிக‌ள‌வு ஊட‌க‌ க‌வ‌னத்தை க‌வ‌ராத‌ இந்த‌த் தாக்குதல், நவீன துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ குவாட‌ரில் பெரும‌ள‌வு ப‌டையின‌ர் குவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ பாதுகாப்பு வ‌லைய‌த்தினுள் ந‌ட‌ந்துள்ள‌து.

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், நகருக்கு வெளியே பேருந்து வ‌ண்டிகளில் சென்ற‌ பாதுகாப்புப் ப‌டையின‌ரும், சீன‌ தொழிலாள‌ர்க‌ளும் வ‌ழி ம‌றித்து சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் க‌ராச்சி ந‌க‌ரில் உள்ள‌ சீன‌ துணைத் தூத‌ர‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ தீவிரவாதத் தாக்குதலில், சீன விசாவுக்கு விண்ணப்பித்த இரண்டு பொது மக்களும், பாதுகாவலருமாக நான்கு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஏன் இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் பொதுவாக‌ ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ளில் அறிவிக்க‌ப் ப‌டுவ‌தில்லை? அத‌ற்குக் கார‌ண‌ம் இந்த‌த் தீவிர‌வாத‌த் தாக்குத‌ல்க‌ள் பாகிஸ்தானில் உள்ள‌ சீன‌ இல‌க்குக‌ளை குறி வைத்து ந‌ட‌த்த‌ப் ப‌டுகின்ற‌ன‌.

எதிரி நாட்டுக்கு எதிரான‌ தாக்குத‌ல்க‌ள் "ந‌ல்ல‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்" என‌ப் ப‌டும். அத‌னால் அமெரிக்காவும், இந்தியாவும் க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணிக்கின்ற‌ன‌. ஊட‌க‌ங்க‌ளும் ந‌ம‌க்கு இதைத் தெரிவிக்காம‌ல் மௌன‌ம் சாதிக்கின்ற‌ன‌.

குவாட‌ர் ந‌க‌ர‌ம் ப‌லுசிஸ்தானில் உள்ள‌து. அத‌னை இல‌ங்கையில் உள்ள‌ அம்பாந்தோட்டையுட‌ன் ஒப்பிட‌லாம். அங்கும் பில்லிய‌ன் க‌ண‌க்கான‌ சீன‌ முத‌லீட்டில் ஒரு ந‌வீன‌ துறைமுக‌மும், விமான‌ நிலைய‌மும் க‌ட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. ச‌ர்வ‌தேச‌ க‌ட‌ல் வ‌ழியாக‌ ந‌ட‌க்கும் எரிபொருள் போக்குவ‌ர‌த்தை க‌ருத்தில் கொண்டு தான் பாகிஸ்தானில் குவாட‌ரிலும், இல‌ங்கையில் அம்பாந்தோட்டையிலும் சீனா முத‌லிட்டுள்ள‌து.

குறிப்பாக‌ குவாட‌ர் துறைமுக‌ம் உள்ள‌ ப‌குதி, பாகிஸ்தானில் ப‌லுச்சி சிறுபான்மையின‌ ம‌க்க‌ளின் பிர‌தேச‌ம் ஆகும். பாகிஸ்தான் அர‌சு ப‌லுசிஸ்தான் மாகாண‌த்தில் எந்த‌ அபிவிருத்தியும் செய்யாம‌ல் பொருளாதார‌த்தில் பின்த‌ங்கிய‌ நிலையில் வைத்திருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் சிறிய‌ மீன்பிடி துறைமுக‌த்தை ம‌ட்டும் கொண்டிருந்த‌ குவாட‌ர், த‌ற்போது துபாய் போன்று ந‌வீன‌ ந‌க‌ர‌மாக‌ மாறிக் கொண்டிருக்கிற‌து. அத‌னால் ஆதாய‌ம‌டைவோர் இஸ்லாமாபாத்திலும், க‌ராச்சியிலும் வாழும் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும், இராணுவ‌ அதிகாரிக‌ளும் தான். ப‌லுச்சி ம‌க்க‌ளுக்கு எந்த‌ ந‌ன்மையும் கிடைப்ப‌தில்லை.

நீண்ட‌ கால‌மாக‌, த‌னி நாடு கோரி பாகிஸ்தான் அர‌சுக்கு எதிராக‌ ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்தும் BLA, சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் சீன‌ ஆக்கிர‌மிப்பாள‌ர்க‌ளையும் வெளியேற்றுவ‌த‌ற்காக‌ போராடுவ‌தாக‌ அறிவித்துள்ள‌து. அத‌ற்காக‌வே ம‌ஜீத் அணி என்ற‌ த‌ற்கொலைப் ப‌டையும் உருவாக்க‌ப் ப‌ட்ட‌து.

ஒவ்வொரு வ‌ருட‌மும் ப‌லுச்சி தீவிர‌வாதிக‌ளின் தாக்குத‌ல்க‌ளும், உயிரிழ‌ப்புக‌ளும் அதிக‌ரித்து வ‌ருகின்ற‌ன‌. ஆனால், சீனாகுக்கு குவாட‌ரில் இருந்து வெளியேறும் நோக்க‌ம் கிடையாது. அந்த‌ள‌வுக்கு பெருந்தொகைப் ப‌ண‌த்தை முத‌லீடு செய்துள்ள‌ன‌ர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட