இலங்கையில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த முதலாவது சிங்கள- முஸ்லிம் கலவரம் பற்றிய வரலாற்றுத் தகவல் ஒன்றை Sarawanan Komathi Nadarasa தினக்குரல் பத்திரிகையில் கட்டுரையாக பதிவு செய்துள்ளார். அதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளரின் தலைநகரமான கொழும்பு நகரில், மருதானை பகுதியில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. அப்போது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் ஓர் ஆங்கிலேயர். அவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து நேர்மையாக நடந்து கொண்டுள்ளார். அந்த ஆங்கிலேய போலிஸ் பொறுப்பதிகாரி, அன்று தீவிரமாக கலவரத்தில் ஈடுபட்ட சில முஸ்லிம்களை கைது செய்துள்ளார். அதில் மூன்று பேர் "வெள்ளையின ஐரோப்பியர்கள்"! உண்மையில் அவர்கள் தான் கலவரம் தீவிரமடைய காரணமாக இருந்துள்ளனர்!! ஒருவர் ஜேர்மனிய யூதர். மற்றைய இரண்டு பெரும் இஸ்லாமியராக மதம் மாறியிருந்த ஆங்கிலேயர்கள். இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள், பிரித்தாளும் உத்தியை பயன்படுத்தியே தமது காலனிகளை நிர்வகித்துள்ளனர். அதன் விளைவுகளை நாங்கள் இப்போதும் அனுபவிக்கிறோம். இலங்கையில் பௌ
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA.