முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1870: சிங்கள- முஸ்லிம் கலவரத்திற்கு காரணமான ஐரோப்பிய முஸ்லிம்கள்

இலங்கையில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த முதலாவது சிங்கள- முஸ்லிம் கலவரம் பற்றிய வரலாற்றுத் தகவல் ஒன்றை Sarawanan Komathi Nadarasa தினக்குரல் பத்திரிகையில் கட்டுரையாக பதிவு செய்துள்ளார். அதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது.  பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளரின் தலைநகரமான கொழும்பு நகரில், மருதானை பகுதியில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. அப்போது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் ஓர் ஆங்கிலேயர். அவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து நேர்மையாக நடந்து கொண்டுள்ளார். அந்த ஆங்கிலேய போலிஸ் பொறுப்பதிகாரி, அன்று தீவிரமாக கலவரத்தில் ஈடுபட்ட சில முஸ்லிம்களை கைது செய்துள்ளார். அதில் மூன்று பேர் "வெள்ளையின ஐரோப்பியர்கள்"! உண்மையில் அவர்கள் தான் கலவரம் தீவிரமடைய காரணமாக இருந்துள்ளனர்!! ஒருவர் ஜேர்மனிய யூதர். மற்றைய இரண்டு பெரும் இஸ்லாமியராக மதம் மாறியிருந்த ஆங்கிலேயர்கள். இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள், பிரித்தாளும் உத்தியை பயன்படுத்தியே தமது காலனிகளை நிர்வகித்துள்ளனர். அதன் விளைவுகளை நாங்கள் இப்போதும் அனுபவிக்கிறோம். இலங்கையில் பௌ

தமிழ்ப் பெண்கள் அணியும் அபாயா ஓர் "இஸ்லாமிய ஆடை" அல்ல!

இன்று வரை பலர் அறியாத உண்மை. இலங்கையில் (இந்து/கிறிஸ்தவ) தமிழ்ப் பெண்களும் "அபாயா" அணிகிறார்கள்! அவர்கள் அதை வேறு பெயரில் அழைத்தாலும், அந்த ஆடையின் வரலாறு ஒன்று தான்.  அபாயா என்பது உண்மையில் ஓர் "இஸ்லாமிய"‌ ஆடை அல்ல‌. ஒரு கால‌த்தில், கிரீஸ் போன்ற‌ ம‌த்திய‌த‌ரைக் க‌ட‌ல் நாடுக‌ளை சேர்ந்த‌ கிறிஸ்த‌வ‌ப் பெண்க‌ளும் அபாயா அணிந்தார்க‌ள். ஏனென்றால் அது அந்த‌ப் பிராந்திய‌ ம‌க்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ உடை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கிரேக்கப் பெண்கள் அபாயா அணிந்தனர். முகத்தை மூடும் பழக்கம் கூட அவர்களிடம் இருந்தது.  போர்த்துக்கல் நீண்ட காலமாக இஸ்லாமிய மூர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் அரேபியக் கலாச்சாரத்தின் பல கூறுகள், போர்த்துக்கல் மக்களால் இன்று வரை பின்பற்றப் பட்டு வருகின்றன. போர்த்துகீசிய மொழியில் அபாயாவை "கவுன்" என்று அழைத்தனர்.  பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்கள், அபாயாவை கவுன் என்ற பெயரில் அறிமுகப் படுத்தினார்கள். அதை இன்றைக்கும் இந்து(மற்றும் கிறிஸ்தவ) த‌மிழ்ப் பெண்க‌ள் வீடுக‌ளில்

இலங்கையில் "இன/மத முரண்பாடு" எனும் வர்க்கப் பிரச்சினை

இல‌ங்கையில் தற்போது தீவிர‌ம‌டைந்துள்ள‌ ம‌த/இன‌ முரண்பாடுக‌ளுக்கு பின்னால் உள்ள‌தும் வ‌ர்க்க‌ப் பிர‌ச்சினை தான். அதை ஓர் உதார‌ண‌ம் மூல‌ம் விள‌க்க‌லாம். மதவாதம், இனவாதம் எல்லாம் வர்க்க முரண்பாடுகளை மறைப்பதற்கான முகமூடிகள் தான். தன் நாட்டு மக்கள் எல்லோரும் அந்த முகமூடிகளை வாங்கி அணிய வேண்டுமென்று ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இதற்கென தயாராக இருக்கும் இனவாத அறிவுஜீவிகள், ஊடகங்கள், சமூக வலைத்தலங்களில் நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் படிப்பறிவு குறைந்த பாட்டாளிவர்க்க மக்களை இனவாதக் கருத்துக்களால் மூளைச் சலவை செய்கின்றனர். அண்மையில் வ‌ட மேல் மாகாண‌த்தில் ந‌ட‌ந்த‌ முஸ்லிம் விரோத‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ அடித்த‌ட்டு ம‌க்க‌ள். அதாவ‌து, லும்ப‌ன்க‌ள் என‌ப்ப‌டும் உதிரிப் பாட்டாளி வ‌ர்க்க‌த்தின‌ர். முஸ்லிம்க‌ளின் வீடுக‌ள், க‌டைக‌ளை கொளுத்தி, அங்கிருந்த‌ பொருட்க‌ளை சூறையாடியுள்ள‌ன‌ர். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த‌ தொழிலாள‌ர்க‌ளே சீருடையில் சென்று கொளுத்தி உள்ள‌ன‌ர். அவ‌ச‌ர‌ கால‌ச் ச‌ட்ட‌ம் அமுலில் இருந்தாலும், வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ ப‌

பாகிஸ்தானில் சீன முதலீடுகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள்

பாகிஸ்தானில் குவாட‌ர் துறைமுக‌ ந‌க‌ர‌த்தில் உள்ள‌ Pearl Continental எனும் ஆடம்பர ஹொட்டேலில், இம்மாத‌ம் ந‌ட‌ந்த‌ (ப‌ய‌ங்க‌ர‌வாத‌) துப்பாக்கிச் சூட்டுத் தாக்குத‌லில் ஒரு க‌ட‌ற்ப‌டையின‌ர் உட்ப‌ட‌ 5 பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். ப‌லுசிஸ்தான் விடுத‌லை இய‌க்க‌த்தின் (BLA) ம‌ஜீத் அணி தாக்குத‌லுக்கு உரிமை கோரியுள்ள‌து. அதிக‌ள‌வு ஊட‌க‌ க‌வ‌னத்தை க‌வ‌ராத‌ இந்த‌த் தாக்குதல், நவீன துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ குவாட‌ரில் பெரும‌ள‌வு ப‌டையின‌ர் குவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ பாதுகாப்பு வ‌லைய‌த்தினுள் ந‌ட‌ந்துள்ள‌து. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், நகருக்கு வெளியே பேருந்து வ‌ண்டிகளில் சென்ற‌ பாதுகாப்புப் ப‌டையின‌ரும், சீன‌ தொழிலாள‌ர்க‌ளும் வ‌ழி ம‌றித்து சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் க‌ராச்சி ந‌க‌ரில் உள்ள‌ சீன‌ துணைத் தூத‌ர‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ தீவிரவாதத் தாக்குதலில், சீன விசாவுக்கு விண்ணப்பித்த இரண்டு பொது மக்களும், பாதுகாவலருமாக நான்கு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். ஏன் இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் பொதுவாக‌ ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ளில் அறிவிக்க‌ப் ப‌டுவ‌தில்லை? அத‌ற்குக் கார‌ண‌ம் இந்த‌த் தீவிர‌வாத‌த் தாக்குத‌ல்க