இன்று வரை பலர் அறியாத உண்மை. இலங்கையில் (இந்து/கிறிஸ்தவ) தமிழ்ப் பெண்களும் "அபாயா" அணிகிறார்கள்! அவர்கள் அதை வேறு பெயரில் அழைத்தாலும், அந்த ஆடையின் வரலாறு ஒன்று தான்.
அபாயா என்பது உண்மையில் ஓர் "இஸ்லாமிய" ஆடை அல்ல. ஒரு காலத்தில், கிரீஸ் போன்ற மத்தியதரைக் கடல் நாடுகளை சேர்ந்த கிறிஸ்தவப் பெண்களும் அபாயா அணிந்தார்கள். ஏனென்றால் அது அந்தப் பிராந்திய மக்களின் பாரம்பரிய உடை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கிரேக்கப் பெண்கள் அபாயா அணிந்தனர். முகத்தை மூடும் பழக்கம் கூட அவர்களிடம் இருந்தது.
போர்த்துக்கல் நீண்ட காலமாக இஸ்லாமிய மூர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் அரேபியக் கலாச்சாரத்தின் பல கூறுகள், போர்த்துக்கல் மக்களால் இன்று வரை பின்பற்றப் பட்டு வருகின்றன. போர்த்துகீசிய மொழியில் அபாயாவை "கவுன்" என்று அழைத்தனர்.
பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்கள், அபாயாவை கவுன் என்ற பெயரில் அறிமுகப் படுத்தினார்கள். அதை இன்றைக்கும் இந்து(மற்றும் கிறிஸ்தவ) தமிழ்ப் பெண்கள் வீடுகளில் அணிகிறார்கள். கவுன் எனும் அபாயா அணிவது, இன்று வரையில் ஈழத் தமிழ்ப் பெண்களின் தனித்துவமான கலாச்சாரமாக பேணப் படுகின்றது. (தமிழ் நாட்டில் இந்த வழக்கம் இல்லை.)
ஐரோப்பியரின் கவுன் (Gown), அரேபியரின் அபாயா (Abaya), இவ்விரண்டு சொற்களும் அடிப்படையில் ஒரே மாதிரியான உடையை குறிக்கும். அதாவது, கழுத்தில் இருந்து கணுக்கால் வரை மறைக்கும், காற்றோட்டமான நீண்ட அங்கி.
கருத்துகள்
கருத்துரையிடுக