வட மேற்கு சிரியாவில் உள்ள அப்ரின் (Afrin) நகரம் துருக்கிப் படையினர் வசம் வீழ்ந்து விட்டது. இதுவரை காலமும் குர்திஸ் YPG படையினர் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரில் தற்போது துருக்கி கொடி பறக்கிறது. துருக்கி படைகள் அப்ரின் நகரை கைப்பற்றுவதற்காக நடந்த யுத்தத்தில், இதுவரையில் 300 க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அப்ரின் மீதான வெற்றியை பிரகடனம் செய்துள்ள துருக்கி ஜனாதிபதி எர்டோகான், "தமது படையினர் 3000 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று விட்டதாகவும், எஞ்சியோர் வாலை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகவும்" தெரிவித்தார். இருப்பினும் போர் இன்னும் ஓயவில்லை என்று குர்திஸ் YPG இயக்கம் அறிவித்துள்ளது. போர் தற்போது வேறொரு கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக தெரிவித்தனர். அநேகமாக YPG ஒரு நீண்ட கெரில்லா யுத்தத்திற்கு தயார்படுத்தலாம் எனத் தெரிய வருகின்றது. சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. குர்திஷ் போராளிகளின்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA.