வட கொரிய எதிர்ப்பாளர்களுக்கு சில அதிர்ச்சியான தகவல்கள்:
1. இந்தோனேசியாவின் பெரும் மதிப்புக்குரிய "சுகார்னோ கல்வி நிலையம்", வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இற்கு, சமாதானத்திற்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது.
ஏற்கனவே இந்த நிலையம், அதே விருதை மகாத்மா காந்திக்கு வழங்கி இருந்தது. இந்த விருது தொடர்பாக, மேற்கத்திய நாடுகளில் கடுமையாக விமர்சிக்கப் பட்ட போதிலும், இந்தோனேசிய அரசு அதனை நியாயப் படுத்தி பேசி வருகின்றது. தமிழ் பேசும் ஏகாதிபத்திய அடிவருடிகளும், இந்தத் தகவலை கேள்விப்பட்டு "அறச் சீற்றத்தை" வெளிப்படுத்தலாம்.
வட கொரியா என்றவுடன், வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கும் போலி ஜனநாயக கோமாளிகள், ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்த நேரம் வாயே திறக்கவில்லை. ஒரு சிறு முணுமுணுப்பை கூட எதிர்ப்பாக தெரிவிக்காமல், ஏழு உலக நாடுகள் மீது படையெடுத்து, பல இலட்சம் மக்களை கொன்று குவித்த ஒபாமாவுக்கு பரிசு கொடுத்ததை ஆமோதித்தார்கள். இது தான் வட கொரிய எதிர்ப்பாளர்களின் இரட்டை வேடம்.
2. "வட கொரியர்கள் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. அது இன்றைக்கும் ஒரு பழமைவாத கலாச்சாரத்தை பின்பற்றும் நாடு." இவ்வாறு, வட கொரியா கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க சென்ற, பெல்ஜிய மாணவர் அலெசான்ட்ரோ, பிபிசி பேட்டியில் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்னரான உடலுறவுக்கு அனுமதிக்காத, "மனித உரிமை மீறலுக்கு" எதிராக, நமது வலதுசாரிகள் தமது "அறச் சீற்றத்தை" வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். "மன்னராட்சி ஒழிக!" "சர்வாதிகாரம் ஒழிக!"
கருத்துகள்
கருத்துரையிடுக