முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாதீர் தமிழர்களே!

இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு பலியாகாதீர்கள் தமிழர்களே!
//வன்னியில் இறுதி யுத்தம் நடந்த போது "அவர்கள்" (முஸ்லிம் மக்கள்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால், "நாங்கள்"(தமிழ் மக்கள்) ஏன் "அவர்களுக்காக" குரல் கொடுக்க வேண்டும்?//
இப்படிப் பேசுவதும், பதிவிடுவதும் இனவாதத்தை ஆதரிக்கும் செயல் ஆகும். எல்லாவற்றுக்கும் முதலில், மக்களை இன அடிப்படையில் "நாங்கள்", "அவர்கள்" என்று பிரிப்பது இனவாதத்தின் பாலபாடம் ஆகும்.

  • அப்போது நடந்த இறுதி யுத்தம், அமெரிக்கப் பாணியில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அறிவிக்கப் பட்டு தான் நடந்தது. அதனை அமெரிக்காவும் ஆமோதித்தது என்பது வேறு விடயம்.

  • இறுதிப் போரின் வெற்றியானது புலிகள் இயக்கத்திற்கு எதிரான வெற்றியாக கருதப் பட்டது. பொது மக்களில் பெரும் பகுதியினர், எப்படியாவது போர் முடிந்தால் சரி என்றும் நினைத்தனர்.

  • அதை "தமிழினத்திற்கு எதிரான வெற்றி" யாக எடுத்துக் கொண்டவர்கள் இனவாதிகள் மட்டுமே. அது ஒட்டுமொத்த சிங்கள, முஸ்லிம் மக்களின் கருத்து அல்ல.

  • பெரும்பாலான சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, குறிப்பிட்டளவு தமிழர்கள் கூட, புலிகள் தோற்கடிக்கப் படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், மக்கள் இழப்புகள் குறித்துக் கவலைப் பட்டவர்கள் மூவினங்களிலும் இருந்தனர்.

  • தென்னிலங்கை ஊடகங்கள் எல்லாம் போர் நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பொது மக்கள் இழப்பை புறக்கணித்தன. கடுமையான செய்தித் தணிக்கை விதித்த அரசின் உத்தரவுக்கிணங்க மிகக் குறைவான எண்ணிக்கையை காட்டின.

  • பொதுவாக ஊடகங்கள் சொல்வதை நம்பும் மக்கள் தான் அதிகம். பெரும்பாலானவை பிரச்சார ஊடகங்கள் தான். அமெரிக்கா முதல் இலங்கை வரை இது தான் யதார்த்தம். தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

  • ஆகவே, "சிரித்தார்கள்... வேடிக்கை பார்த்தார்கள்.." என்று ஒட்டு மொத்த (சிங்கள, முஸ்லிம்) மக்களின் மீதும் பழிபோடுவது தவறானது. இது இனவாதிகளின் அரசியல் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு பரப்பப் படுகின்றது. 

  • இதைத் தான் சிறிலங்கா பேரினவாத அரசும் எதிர்பார்க்கிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னார்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட