முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோஷலிச கிழக்கு ஜெர்மனி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்



முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த நண்பர் ஒருவர், எனக்கு கணனியின் பாகங்களை பகுதி பகுதியாக பிரித்துப் போட்டு, பின்னர் பொருத்தி முழுமையான கணணியாக்குவது எப்படி என்று காட்டித் தந்தார். பெர்லின் மதில் விழும் பொழுது, அவருக்கு பத்து வயதாக இருந்திருக்கலாம். அந்த நண்பர், தனது செயலை ஒரு உதாரணம் மூலம் புரிய வைத்தார்.

ஒரு முதலாளித்துவவாதி, பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை சாப்பிடக் கொடுத்து விட்டு, பின்னர் அவன் கஷ்டப் பட்டு வேலை செய்து, மீன் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எதிர்பார்ப்பான். அதே நேரம், ஒரு பொதுவுடமைவாதி பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதுடன், அவனாகவே மீன் பிடித்து உண்பது எப்படி என்றும் காட்டிக் கொடுப்பான்.

மக்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காமல், அறியாமையில் வைத்திருந்தால் தான், முதலாளி கோடி கோடியாக இலாபம் சம்பாதிக்க முடியும். "நமது தமிழ் மக்களுக்கு கம்யூனிசம் தேவையில்லை. இன்று யாருமே அதை பொருட் படுத்துவதில்லை. மக்கள் இடதுசாரிகளை வெறுக்கிறார்கள்..." என்றெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கூட உளறித் திரிகின்றார்கள்.

அவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும் அச்சம் தான், இந்த உளறலுக்கு காரணம். அவர்களிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அறிவியல், அனைத்து மக்களையும் போய்ச் சேர்ந்து விட்டால், யார் அவர்களை மதிப்பார்கள்? அதற்குப் பின், கை நிறைய சம்பளம் வாங்கி, வாய் நிறைய உண்ண முடியுமா?

எதற்காக பெரும்பாலான நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள், கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்பதற்கு, இதை விட வேறு உதாரணம் வேண்டுமா? ஐயோ பாவம். அவர்கள் தாங்கள் மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
******

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்னணியில் திகழ்ந்த கிழக்கு ஜெர்மனி.

இன்று உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உருவாகி வருகின்றது. பாவித்து வீசிய பொருட்களை மீள்பாவனை செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் கவனம் செலுத்துகின்றன.

ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னரே, சோஷலிச கிழக்கு ஜெர்மனி சிறப்பாக நடைமுறைப் படுத்தி வந்தது. நாடு முழுவதும் மீள்பாவனைக்கான சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கின. பாவித்து வீசப்படும் போத்தல்கள், தகரங்கள், கடதாசிகள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொடுப்போருக்கு சிறு தொகை சன்மானம் கொடுக்கப் பட்டது. ஜெர்மன் ஒன்றிணைவுக்குப் பின்னர், அந்தத் தொழிற்சாலைகள் யாவும் மூடப்பட்டு விட்டன. ஏனென்றால், பொருட்களை மீள் பாவனைக்கு பயன்படுத்துவது "சோஷலிசம்" ஆகும்!
******

ஒரு மேற்கு ஜெர்மன் பிரஜையின் வாக்குமூலம்: 
- எந்தக் காலத்திலும் உணவுத்தட்டுப்பாடு இருக்கவில்லை. யாரும் பட்டினியால் சாகவில்லை. வாழைப்பழம், விஸ்கி, கொக்கோ கோலா போன்ற வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. 
- பாண் (Bread), உருளைக் கிழங்கு, பொதுப் போக்குவரத்து கிட்டத்தட்ட "இலவசமாக" கிடைத்தது. (விலை மிக மிகக் குறைவு). வீட்டு வாடகையும் மிக மிகக் குறைவு. 
- தொட்டில் முதல் சுடுகாடு வரை, தனி மனிதனின் அனைத்து தேவைகளையும் அரசே நிறைவேற்றியது. விளையாட்டு, விடுமுறை, ஓய்வுநேர கேளிக்கைகளை அரசே ஒழுங்கு படுத்தியது. 
- தெருவில் ஊதாரியாக திரியும் இளைஞர்களை காண முடியாது. கிரிமினல் குற்றங்கள் பற்றி யாருமே கேள்விப்படுவதில்லை. 
- உங்களுக்கு உதவி செய்வதற்கு எந்நேரமும் யாராவது ஒருவர் இருந்தார். மக்களுக்கிடையில் ஒற்றுமையும், பரஸ்பர உதவி செய்யும் மனப்பான்மையும் இருந்தது. அதற்கு மாறாக, மேற்கு ஜெர்மனியில் எல்லோருமே சுயநலவாதிகளாக இருந்தார்கள்.

கிழக்கு ஜெர்மன் மக்கள், இப்போதும் சோஷலிச கடந்த காலம், "ஒரு பொற்காலம்" என்று நினைவுகூருகின்றனர். அண்மையில் எடுத்த கருத்துக் கணிப்பொன்றின் படி, 40% பேர், முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் வாழ்க்கை சிறப்பாக இருந்தது என்று கூறுகின்றனர். பெர்லின் மதில் அப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நல்லது என்று ஏங்கும் பலரை, நீங்கள் இன்றைக்கும் கிழக்கு ஜெர்மனியில் காணலாம். இந்தத் தகவலை இத்தாலி இணையத் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

Germania, Ostalgie più forte che mai. Viaggio tra chi rivuole la Ddr

- Kalaiyarasan

The truth about the GDR
https://www.youtube.com/watch?v=KTIC73lVZz8

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட