இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு லெனின் உதவிய வரலாறு தெரியாத தற்குறிகளான பாரதீய நாஜிக் கட்சியினர் கவனத்திற்கு:
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய, எம்.என்.ராயின் கம்யூனிச புரட்சிப் படை பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அளவிற்கு அது ஊடகங்களினால் பேசப் படாமை ஒரு காரணமாக இருக்கலாம்.
வங்காளி புரட்சிவீரர் எம்.என்.ராய், பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய காரணத்தால் தேடப் பட்டு வந்தார். அவர் மெக்சிகோ சென்று, மொமிண்டேர்ன் பிரதிநிதியை சந்தித்தார். அன்றிலிருந்து மார்க்சிஸ்டாக மாறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தத்தில் மட்டுமல்லாது, மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் அவரது பங்களிப்பும் இருந்துள்ளது.
போல்ஷெவிக் புரட்சியின் தலைவர் லெனினை சந்திந்த முதலாவது இந்தியர் எம்.என்.ராய் தான். லெனினின் நன்மதிப்புக்கு உரியவராக இருந்த படியால், இந்தியப் புரட்சிக்கு ஆதரவை பெற்றுக் கொண்டார். லெனினின் பணிப்பின் பேரில், மத்திய ஆசியாவில், தாஷ்கென்ட் நகரில், இந்திய விடுதலைப் படை உருவாக்கப் பட்டது.
எம்.என். ராயின் புரட்சிப் படையில் பெருமளவு முஸ்லிம் வீரர்களும் சேர்ந்திருந்தனர். முதலாம் உலகப்போரில் துருக்கி தனது பகுதிகளை பிரிட்டனிடம் இழந்தது. அப்போது துருக்கி இராணுவத்திற்கு உதவுவதற்காக, இந்திய முஸ்லிம் தொண்டர்கள் சென்று கொண்டிருந்தனர்.
சுமார் எழுபது முஸ்லிம்கள் (பெரும்பாலும் இன்றைய பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்) எல்லை தாண்டும் நேரம், தற்செயலாக சோவியத் யூனியனுக்குள் சென்று விட்டனர். சோவியத் செம்படையினர் அவர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். எம்.என். ராய் அவர்களை பொறுப்பெடுத்து இந்திய புரட்சிப் படையில் இணைத்துக் கொண்டார்.
நிச்சயமாக எல்லோரும் கம்யூனிஸ்டுகளாக மாறப் போவதில்லை. குறைந்தது இருபது பேராவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தனர். அவர்களைத் தவிர ஏனையோர் கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப் பட்டு, எம்.என்.ராயின் படையில் சேர ஒத்துக் கொண்டனர். இந்திய கம்யூனிச இராணுவம் பெரியளவு தாக்கத்தை உண்டாக்கா விட்டாலும், லெனின் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு உதவியது.
போல்ஷேவிக் புரட்சி நடந்த அதே காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் மத்திய ஆசியாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்று தோல்வியைத் தழுவினார்கள். அதன் தொடர்ச்சி தான் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புப் போர்களும். கடைசியில் பிரட்டனும், சோவியத் யூனியனும், ஆப்கானிஸ்தானை நடுநிலை நாடாக ஏற்றுக் கொண்டன.
எழுபதுகளில் நடந்த ஆப்கான் போரில் ஜிகாதிப் படையினரை, பாகிஸ்தானியர்கள் ஆதரித்த விடயம் அனைவருக்கும் தெரியும். எதற்காக ஆதரித்தீர்கள் என்று பாகிஸ்தானிய நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இது:
"பாகிஸ்தானிலும் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. நிறைய கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். சோவியத் படைகள் ஆப்கானிஸ்தான் வரை வந்து விட்டது. அடுத்ததாக பாகிஸ்தானும் கம்யூனிச நாடாகி விட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்து நிறுத்திவிட்டோம்!"
இன்றைக்கும் பலர் அப்பாவித்தனமாக நினைப்பது மாதிரி, பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து - முஸ்லிம் முரண்பாடு காரணம் அல்ல. இந்தியாவும் ஒரு கம்யூனிச நாடாவதை தடுத்து நிறுத்துவது தான் உண்மையான நோக்கம். பாகிஸ்தானை பிரிக்காது விட்டிருந்தால், இந்தியா ஆப்கானிஸ்தானாக மாறி விட்டிருக்கும்.
- கலையரசன்
கருத்துகள்
கருத்துரையிடுக