முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் லெனினின் பங்களிப்பு


இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு லெனின் உதவிய வரலாறு தெரியாத தற்குறிகளான பாரதீய நாஜிக் கட்சியினர் கவனத்திற்கு:

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய, எம்.என்.ராயின் கம்யூனிச புரட்சிப் படை பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அளவிற்கு அது ஊடகங்களினால் பேசப் படாமை ஒரு காரணமாக இருக்கலாம்.

வங்காளி புரட்சிவீரர் எம்.என்.ராய், பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய காரணத்தால் தேடப் பட்டு வந்தார். அவர் மெக்சிகோ சென்று, மொமிண்டேர்ன் பிரதிநிதியை சந்தித்தார். அன்றிலிருந்து மார்க்சிஸ்டாக மாறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தத்தில் மட்டுமல்லாது, மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் அவரது பங்களிப்பும் இருந்துள்ளது.

போல்ஷெவிக் புரட்சியின் தலைவர் லெனினை சந்திந்த முதலாவது இந்தியர் எம்.என்.ராய் தான். லெனினின் நன்மதிப்புக்கு உரியவராக இருந்த படியால், இந்தியப் புரட்சிக்கு ஆதரவை பெற்றுக் கொண்டார். லெனினின் பணிப்பின் பேரில், மத்திய ஆசியாவில், தாஷ்கென்ட் நகரில், இந்திய விடுதலைப் படை உருவாக்கப் பட்டது.

எம்.என். ராயின் புரட்சிப் படையில் பெருமளவு முஸ்லிம் வீரர்களும் சேர்ந்திருந்தனர். முதலாம் உலகப்போரில் துருக்கி தனது பகுதிகளை பிரிட்டனிடம் இழந்தது. அப்போது துருக்கி இராணுவத்திற்கு உதவுவதற்காக, இந்திய முஸ்லிம் தொண்டர்கள் சென்று கொண்டிருந்தனர்.

சுமார் எழுபது முஸ்லிம்கள் (பெரும்பாலும் இன்றைய பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்) எல்லை தாண்டும் நேரம், தற்செயலாக சோவியத் யூனியனுக்குள் சென்று விட்டனர். சோவியத் செம்படையினர் அவர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். எம்.என். ராய் அவர்களை பொறுப்பெடுத்து இந்திய புரட்சிப் படையில் இணைத்துக் கொண்டார்.

நிச்சயமாக எல்லோரும் கம்யூனிஸ்டுகளாக மாறப் போவதில்லை. குறைந்தது இருபது பேராவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தனர். அவர்களைத் தவிர ஏனையோர் கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப் பட்டு, எம்.என்.ராயின் படையில் சேர ஒத்துக் கொண்டனர். இந்திய கம்யூனிச இராணுவம் பெரியளவு தாக்கத்தை உண்டாக்கா விட்டாலும், லெனின் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு உதவியது.

போல்ஷேவிக் புரட்சி நடந்த அதே காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் மத்திய ஆசியாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்று தோல்வியைத் தழுவினார்கள். அதன் தொடர்ச்சி தான் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புப் போர்களும். கடைசியில் பிரட்டனும், சோவியத் யூனியனும், ஆப்கானிஸ்தானை நடுநிலை நாடாக ஏற்றுக் கொண்டன.

எழுபதுகளில் நடந்த ஆப்கான் போரில் ஜிகாதிப் படையினரை, பாகிஸ்தானியர்கள் ஆதரித்த விடயம் அனைவருக்கும் தெரியும். எதற்காக ஆதரித்தீர்கள் என்று பாகிஸ்தானிய நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இது: "பாகிஸ்தானிலும் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. நிறைய கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். சோவியத் படைகள் ஆப்கானிஸ்தான் வரை வந்து விட்டது. அடுத்ததாக பாகிஸ்தானும் கம்யூனிச நாடாகி விட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்து நிறுத்திவிட்டோம்!"

இன்றைக்கும் பலர் அப்பாவித்தனமாக நினைப்பது மாதிரி, பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து - முஸ்லிம் முரண்பாடு காரணம் அல்ல. இந்தியாவும் ஒரு கம்யூனிச நாடாவதை தடுத்து நிறுத்துவது தான் உண்மையான நோக்கம். பாகிஸ்தானை பிரிக்காது விட்டிருந்தால், இந்தியா ஆப்கானிஸ்தானாக மாறி விட்டிருக்கும்.

- கலையரசன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட