//தரையில் தான் சிந்திய காபியை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர். நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் இருந்த அசுத்ததை தாமாகவே சுத்தம் செய்தார்.// ( BBC Tamil ) நெதர்லாந்து பாராளுமன்றத்தில், பிரதமர் மார்க் ருட்டே, தான் நிலத்தில் கொட்டிய காப்பியை தானே சுத்தப் படுத்துகிறார். இதிலே என்ன புதினம் இருக்கிறது? அந்த நேரத்தில் பாராளுமன்ற சுத்திகரிப்பு தொழிலாளர் இருந்த போதிலும், அவர்களை விடாமல் தானே சுத்தப் படுத்துவதில் என்ன அதிசயம் கண்டீர்? அது அவரது தவறு என்பதால் தானே சுத்தப் படுத்துகிறார். சரி தானே? அவர் அரசியல்வாதியாக இருப்பதால் கொஞ்சம் ஓவராக சீன் போடுகிறார் என்று சொல்லலாம். இங்குள்ள ஊடகங்கள் அதை பெரிது படுத்துவதில்லை. நெதர்லாந்து நாட்டில் இது வழமையான விடயம். நாங்கள் குப்பை போட்டால் அதை நாமே எடுத்துப் போட வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே பின்பற்றுகிறார்கள். வசதியான மத்தியதர வர்க்க குடும்பம் என்றால் கூட வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பதில்லை. இன்னமும் நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA.