முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாழ் வடமராட்சி கடலில் பிடிக்கப்படும் இனவாத மீன்கள்


நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரப் பிரச்சினைகளை திசைதிருப்பும் வகையில், அதற்குள் இனவாதத்தை நுழைத்து பிழைப்பு அரசியல் நடத்துவதில் தமிழினவாதிகள் மகா கில்லாடிகள்.

யாழ் வடமராட்சி கிழக்கு கரையோரத்தில் சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் அத்துமீறி வந்து மீன்பிடிக்கிறார்கள் என்று, சில தினங்களுக்கு முன்னர் இனவாதிகள் சர்ச்சையை கிளப்பி விட்டனர். அவர்கள் சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். எமது பிரதேச வளங்களை சுரண்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டி இருந்தனர்.

அந்த சம்பவம் குறித்து தமிழினவாதிகள் மேற்கொண்டு தெரிவித்த கருத்து இது: "சிங்கள- முஸ்லிம் மீனவர்கள் ட்ரோலர் படகுகள், மற்றும் நவீன கடற்றொழில் உபகரணங்களை பாவிக்கிறார்கள். வடமராட்சி கிழக்குப் பிரதேச தமிழ் மீனவர்களிடம் அந்தளவு வசதி இல்லை" என்றும் கூறினார்கள். அதாவது, இது பொருளாதார வசதி சம்பந்தப் பட்ட விடயம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

இலங்கையில் வாழும் சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்பது போலவும், தமிழ் மீனவர்கள் எல்லோரும் ஏழைகள் என்பது போலவும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. என்ன செய்வது? இனவாதிகளுக்கு எப்போதும் "குழந்தை மனசு". அவர்களால் இனம் தாண்டி எதையும் சிந்திக்க முடியாது.

வட மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கம், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று பேசிய பொழுது சில உண்மைகள் தெரிய வந்தன. உண்மையில், வடமராட்சி கிழக்கு கரையோரத்தை சேர்ந்த தமிழ் முதலாளி ஒருவர் தான், சிங்கள- முஸ்லிம் தொழிலாளர்களை கொண்டு வந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் வேலைக்கு அமர்த்தி உள்ளார். அவரே தனது காணிக்குள் குடிசைகளை போட்டுக் கொடுத்து, அவர்களை தங்க வைத்துள்ளார்.

சிவாஜிலிங்கம் ஏற்கனவே இந்து மத அடிப்படைவாதம் பேசி சர்ச்சைக்குள் மாட்டுப் பட்டவர். அவருடன் சைக்கிள் கட்சியை (TNPF) சேர்ந்தவர்களும் அந்த இடத்திற்கு சென்றிருந்தனர். கடலட்டை பிடிக்கும் தொழிலை உடனடியாக நிறுத்தா விட்டால், "குடிசைகளை கொளுத்துவோம்" என்று, வன்முறையை தூண்டும் வகையில் சிவாஜிலிங்கம் பேசினார்.

அவர்கள் அங்கு சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இனவாதிகள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால், சட்டப் படி தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக, சம்பந்தப் பட்ட தமிழ் முதலாளி காட்டியுள்ளார். இலங்கை நீரியல் வள நிறுவனம் வழங்கிய, அந்த அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்று, மருதங்கேணி பிரதேச சபை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் சிலர் கேட்டுக் கொண்டனர்.

சம்பந்தப் பட்ட தமிழ் முதலாளி, எதற்காக வேறு பிரதேசங்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்தார் என்று கேட்கலாம். சிலநேரம் உள்ளூரில் ஆட்கள் கிடைக்காமல் இருக்கலாம். அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் அதிக கூலி கேட்கலாம். ஆகவே, குறைந்த கூலியில் அதிக உழைப்பை கொடுக்க தயாரான மலிவு விலைக் கூலிகளை கொண்டு வந்திருக்கலாம்.

யாழ் மாவட்டத்திற்குள் வந்து வேலை செய்யும் மலிவு விலைக் கூலிகள், சிங்களவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருப்பது தமிழினவாதிகளின் கண்களை உறுத்தும் விடயம். இந்தப் பிரச்சினையை அவர்கள் சம்பந்தப் பட்ட தமிழ் முதலாளிகளிடம் எழுப்பலாம். ஆனால், செய்ய மாட்டார்கள். ஏனென்றால், இதே தமிழினவாதிகளும் தமிழ் முதலாளிகளின் பணத்தை எதிர்பார்த்து அரசியல் நடத்துபவர்கள் தான்.

ஈழத்தில் இனவாத அரசியல் நடத்தி உழைக்கும் மக்களை பிரித்து வைப்பதற்காக சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வட இலங்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) என்ற ஒரு கட்சி, தென்னிலங்கை சிங்கள இனவாதத்திற்கு போட்டியாக, வட இலங்கையில் தமிழினவாதத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபடுகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற இனவாதக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் ஒரு பெருந்தோட்ட முதலாளி. யாழ்ப்பாணத்தில் பிரபலமான தமிழ் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விபரம் தெரிவிக்கப் படுவதில்லை. இனவாதத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்வதற்கு இதை விட வேறு விளக்கம் தேவையில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட