முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

சமீபத்திய இடுகைகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை.... நான் தமிழீழன் இல்லை....

நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. நான் இந்தியன் இல்லை. நான் பிரித்தானியன் இல்லை. உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள். தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள். முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள். நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. - கலையரசன் 16-05-2020

இனவாத அறியாமை அகற்றிய ஜெர்மன் கிராமம்

இன‌வாத‌ம், இஸ்லாமோபோபியாவுக்கு காரண‌ம் ம‌க்க‌ளின் அறியாமை. வேற்றின‌த்த‌வ‌ருட‌ன் க‌ல‌ந்து ப‌ழ‌கும் வாய்ப்புக் கிடைத்தால் த‌ப்பெண்ண‌ம் வில‌கும் என்ப‌தை விள‌க்கும் செய்திக் க‌ட்டுரை ஒன்று The New York Times (21 September 2019) இல் பிர‌சுர‌மாகியுள்ள‌து. ம‌னித‌நேய‌ம் உள்ள‌ சாதாரண‌ ம‌க்க‌ள் "எதிரி" இன‌த்த‌வ‌ருட‌னும் ந‌ட்புட‌ன் ப‌ழ‌குவார்க‌ள். இத‌ற்கு உதார‌ண‌மாக‌ முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ஒரு கிராம‌ம் ந‌டைமுறையில் நிரூபித்துக் காட்டியுள்ள‌து. 2015 ம் ஆண்டு ஜேர்ம‌னியில் போல‌ந்து எல்லைக்கு அருகில் உள்ள‌ கொல்ஸோவ் (Golzow) கிராம‌த்தில் 16 சிரிய‌ அக‌திக் குடும்ப‌ங்க‌ள் குடிய‌ம‌ர்த்த‌ப் ப‌ட்ட‌ன‌. ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் இருந்த‌ ச‌ந்தேக‌ங்க‌ள், அவ‌ந‌ம்பிக்கைக‌ள் ம‌றைந்து, த‌ற்போது அங்கு எல்லோரும் ம‌கிழ்ச்சியாக‌ வாழ்கின்றன‌ர். க‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் கொல்ஸோவ் கிராம‌வாசிக‌ளில் நான்கில் ஒருவ‌ர், அக‌திக‌ள், இஸ்லாமிய‌ருக்கு எதிரான‌ இன‌வாத‌ம் பேசும் AfD க‌ட்சிக்கு வாக்க‌ளித்த‌ன‌ர். அத‌ற்காக‌ அந்த‌ ம‌க்க‌ள் "இன‌வாதிக‌ள்" என்று அர்த்த‌ம‌ல்ல‌. அர‌சிய‌ல் வேறு, ய‌தார்த்த‌ம்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

வட கொரியாவில் இந்த அழகான வீடு முற்றிலும் இலவசம்!

வட கொரியாவில் இந்த அழகான வீடு உங்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. வாடகையும் அதிகமில்லை. இரண்டு மாதம் வாடகை கட்டவில்லை என்ற காரணத்திற்காக யாரும் உங்களைப் பிடித்து தெருவில் விட மாட்டார்கள். இங்கே "வாடகை" என்பது பராமரிப்பு செலவுகளுக்கானது. பெரும்பாலும் புதிய வீட்டுமனைகள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்பதால் பராமரிப்புச் செலவுகளும் அதிகம். அது அங்கு குடியிருக்கும் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. தொண்ணூறுகளுக்கு முன்னர் வட கொரியாவில் சோஷலிச அமைப்பு இருந்த காலத்தில் எழுதப்பட்ட சட்டம் இப்போதும் அமுலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தனியாக வீடு கிடைப்பதற்கான வசதிகளை அரசே செய்து கொடுக்கும். ஒரு குடும்பம் புதிய வீடொன்றுக்கு குடிபுகும் பொழுது "ipsajung" (குடிபுகுந்த பத்திரம்) எனும் பத்திரம் வழங்கப் படும். ipsajung பத்திரத்தில் "வசிப்பதற்கான அனுமதி" என்று தான் எழுதப் பட்டுள்ளது. ஆனால் காலாவதியாகும் திகதியோ, அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தமோ அல்ல. ஆகையினால் மக்கள் தாம் "சொந்த வீட்டில்" வசிப்பதாக நம்பி வந்தனர். இ

காஷ்மீர் & ஈழம் : தீராத் துயரை பகிர்தல்

காஷ்மீரில் ஒரு கிராமத்தில், இந்திய இராணுவம் வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் அனைவரையும் பிடித்து வந்து, ஒரு பொது இடத்தில் இருத்தி வைத்திருக்கும் காட்சி. 1987 ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்த எனக்கும் இதே மாதிரியான அனுபவம் கிடைத்தது. அப்போது எங்களது கிராமத்தை சுற்றிவளைத்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் எல்லோரையும் வெளியே வரச் சொன்னார்கள். எங்கள் எல்லோரையும் அங்கிருந்த ஆரம்பப் பாடசாலை முற்றத்தில் அமர வைத்தார்கள். பின்னர் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தார்கள். அந்த இராணுவ முகாமும் ஒரு பாடசாலைக் கட்டிடம் தான். எங்களை எல்லாம் வகுப்பறை மண்டபங்களில் வெறும் தரையில் படுக்க வைத்தார்கள். அப்போது அவர்கள் இரவுணவாக தந்த காய்ந்து போன சப்பாத்தியும், தண்ணீர் மாதிரியான சாம்பாரும் இப்போதும் நினைவில் உள்ளது. அடுத்த நாள், சந்தேகத்திற்கிடமான ஒரு சிலரை மட்டும் தடுத்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுதலை செய்தார்கள். எங்கள் ஊரில் இருந்த பெரும்பாலான வீடுகளில் அன்று பெண்கள் மட்டும் தனியாக இருந்தார்கள

நாஜி இந்தியாவின் அடுத்த அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்!

இதோ நாஜி இந்தியாவின் அடுத்த கட்ட அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்! இது அசாமில் தங்கியுள்ள பங்களாதேஷ் குடியேறிகளுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த தடுப்பு முகாம்கள் நாளைக்கு நாடு முழுவதும் கட்டப் படலாம். தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளும் அதற்குள் அடைக்கப் படலாம். அது மட்டுமல்ல, நாளைக்கு அரசு நினைத்தால், யாரை வேண்டுமானாலும் ஏதாவதொரு சாட்டுக் கூறி குடியுரிமையை பறித்து தடுப்பு முகாமுக்கு அனுப்பலாம். அசாம் மாநிலத்தில் பல தசாப்தகாலமாக தங்கியிருந்து இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்த தொழிலாளர்களைத் தான், பாஜக நாஜிகளின் கொடுங்கோல் அரசு ஈவிரக்கமின்றி தடுப்பு முகாமிற்கு அனுப்புகிறது. ஏழை பாமரத் தொழிலாளர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரச ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தை காட்டி, தடுப்பு முகாமுக்குள் அடைத்து வைக்கவிருக்கிறது. இவ்வாறு தான் நாஜி ஜெர்மனியின் அடக்குமுறை ஆட்சி ஆரம்பமாகியது. பிரெஞ்சு, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜெர்மனியில் குடியேறியவர்கள் ஜெர்மன் குடியுரிமை பெறும் வாய்ப்பை இல்லாதொழித்தது. அப்படியான "சட்டவிரோத குடியேறிகளுக்காகவே" தடு