முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலி ஆதரவாளர் வேஷம் போடும் தமிழ்த் தேசிய வலதுசாரிகள்


தமிழீழம் கிடைத்திருந்தால், அதற்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடிய போராளிகளுக்கு தான், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

அதற்காக தனியான ஒதுக்கீடு கொண்டு வரப் பட வேண்டும். போராடப் போகாமல் சொகுசாக வாழ்ந்து, பல்கலைக்கழகம் வரை படித்து முடித்தவரைத் தான், வேலைகளுக்கான நேர்முகப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கக் கூடாது. 

தனி நாடு கிடைத்த பின்னர் போராளிக்கு வேலை கிடைக்காது என்றால், பிறகென்ன ...... அவன் போராட வேண்டும்? தனி நாடு கிடைத்த பயனை, போராடாமல் சொகுசாக வாழ்ந்த ஒருவன் அனுபவிக்கிறான் என்றால், அந்த தனி நாடு எதற்கு? அது யாருக்கான விடுதலை?

ஈழத்தில் "புலி ஆதரவாளர்" வேஷம் போடும், வலதுசாரிகளின் சுயரூபத்தை அறிந்து கொள்ள ஒரு வழியுள்ளது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், "தமிழர் ஒற்றுமையை குலைக்கும் சாதி வெறியர்கள்", "தமிழர்களை சுரண்டும் முதலாளிகள்" ஆகியோரை, சமூகவிரோதிகளாக அறிவித்து, மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் புலி எதிர்ப்பாளராக மாறி விடுவார்கள். திடீரென புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி எமக்கு வகுப்பெடுப்பார்கள்.

வறுமையின் நிமித்தம் பாலியல் தொழில் செய்த அபலைப் பெண்ணுக்கு, புலிகள் மரண தண்டனை வழங்கியதை ஆதரித்தார்கள். ஆனால், பல தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை வன்புணர்ச்சி செய்த சாதி வெறியர்களை "மன்னித்து" விட்டு விடச் சொல்கிறார்கள்.

வறுமை காரணமாக மாடு திருடியவனுக்கு மரண தண்டனை வழங்கியதை ஆதரித்தார்கள். அதே நேரம், கோடி கோடியாக கொள்ளையடித்த முதலாளிகளையும், நிலவுடைமையாளர்களையும் கண்டுகொள்ளாமல் விடச் சொல்கிறார்கள்.

ஈழத்து அரசியல் களத்தில், ஆணாதிக்கம், சாதிய மேலாதிக்கம், முதலாளித்துவ சுரண்டல் என்பன, தமிழ் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளன. அதற்குக் காரணமான சமூக விரோத சக்திகள், புலிகளின் பாணியில் களையெடுக்கப் படாத வரையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது.

புதுசு புதுசாக தமிழ் (தேசிய) இணையத் தளங்கள் முளைத்துக் கொண்டிருந்த காலமது. அப்போது என்னை சந்தித்த புலம்பெயர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் கேட்டார்: "அண்ணே, நீங்களும் ஒரு இணையத்தளம் நடத்துங்கோ... அதற்கான செலவுகளை நாங்கள் தாறம்..."

அவர் அடுத்து சொன்ன "நிபந்தனை" தான், தமிழ் இணையத்தளங்களின் சுயத்தை வெளிப்படுத்தியது. "செய்திகளை சேகரிப்பதற்கு சிரமப் படத் தேவையில்லை... பதிவு, புதினம் அல்லது தமிழ்நெட் போன்ற இணையத்தளங்களில் வரும் தகவல்களை, அப்படியே கொப்பி பேஸ்ட் செய்து போட்டால் போதும்!"

ஒரு தடவை, "புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதி" என்று கூறிக் கொண்டு, அதிர்வு என்ற இணையத்தளம் நடத்தும் கண்ணன், எனது சி.ஐ.ஏ. பற்றிய கட்டுரை ஒன்றை தானே எழுதியதாக எடுத்துப் போட்டிருக்கிறார். அதைப் பல நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதைப் பார்த்த பொழுது,எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது.

சொந்தச் சரக்கு எதுவுமில்லாத "புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகள்", கொள்கை, கோட்பாடுகளை இடதுசாரிகளிடம் கடன் வாங்குவது அடிக்கடி நடக்கும் விடயம். ஏற்கனவே, "சுயநிர்ணயம், ஏகாதிபத்தியம், பேரினவாதம், அரச பயங்கரவாதம்" போன்ற பல அரசியல் கலைச் சொற்களை, அவர்கள் இடதுசாரிகளிடம் இருந்து தான் கற்றுக் கொண்டார்கள். அதை வெளிப்படையாக சொல்வதற்கு என்ன தயக்கம்? நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட