முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கையில் "இன/மத முரண்பாடு" எனும் வர்க்கப் பிரச்சினை


இல‌ங்கையில் தற்போது தீவிர‌ம‌டைந்துள்ள‌ ம‌த/இன‌ முரண்பாடுக‌ளுக்கு பின்னால் உள்ள‌தும் வ‌ர்க்க‌ப் பிர‌ச்சினை தான். அதை ஓர் உதார‌ண‌ம் மூல‌ம் விள‌க்க‌லாம்.

மதவாதம், இனவாதம் எல்லாம் வர்க்க முரண்பாடுகளை மறைப்பதற்கான முகமூடிகள் தான். தன் நாட்டு மக்கள் எல்லோரும் அந்த முகமூடிகளை வாங்கி அணிய வேண்டுமென்று ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இதற்கென தயாராக இருக்கும் இனவாத அறிவுஜீவிகள், ஊடகங்கள், சமூக வலைத்தலங்களில் நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் படிப்பறிவு குறைந்த பாட்டாளிவர்க்க மக்களை இனவாதக் கருத்துக்களால் மூளைச் சலவை செய்கின்றனர்.

அண்மையில் வ‌ட மேல் மாகாண‌த்தில் ந‌ட‌ந்த‌ முஸ்லிம் விரோத‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ அடித்த‌ட்டு ம‌க்க‌ள். அதாவ‌து, லும்ப‌ன்க‌ள் என‌ப்ப‌டும் உதிரிப் பாட்டாளி வ‌ர்க்க‌த்தின‌ர். முஸ்லிம்க‌ளின் வீடுக‌ள், க‌டைக‌ளை கொளுத்தி, அங்கிருந்த‌ பொருட்க‌ளை சூறையாடியுள்ள‌ன‌ர். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த‌ தொழிலாள‌ர்க‌ளே சீருடையில் சென்று கொளுத்தி உள்ள‌ன‌ர்.

அவ‌ச‌ர‌ கால‌ச் ச‌ட்ட‌ம் அமுலில் இருந்தாலும், வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ ப‌ல‌ரைக் கைது செய்த போலிஸ் அடுத்த‌ நாளே விடுத‌லை செய்த‌து. சில இடங்களில் அர‌சிய‌ல்வாதிக‌ள் நேரில் சென்று விடுவித்துள்ள‌ன‌ர். ப‌ல‌ குற்ற‌வாளிக‌ளை CCTV க‌மெரா மூல‌ம் அடையாள‌ம் காண‌க் கூடிய‌தாக‌ இருந்தும் பொலிஸ் அவ‌ர்க‌ளை கைது செய்ய‌வில்லை.

ச‌ற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். ஓரிரு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் கூட‌ இதே வ‌ட‌ மேல் மாகாண‌த்தில், இதே அடித்த‌ட்டு ம‌க்க‌ள் சுற்றுச் சூழ‌ல் மாச‌டைத‌லை எதிர்த்துப் போராட்ட‌ம் ந‌ட‌த்தினார்க‌ள். கொழும்பிலும் இத‌ர‌ ப‌குதிக‌ளிலும் மாண‌வ‌ர்க‌ள் இல‌வச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடினார்க‌ள்.

அப்போதெல்லாம் இதே பொலிஸ் ஒடுக்குமுறைக் க‌ருவியாக‌ செய‌ற்ப‌ட்ட‌து. சாத்வீக‌ப் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ ம‌க்க‌ளை அடித்து உதைத்து ம‌ண்டை உடைத்த‌து. கைது செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஒரு வ‌ருட‌மாக கூட‌ சிறையில் அடைத்து வைத்திருந்த‌ன‌ர்.

சிங்க‌ள‌ அடித்த‌ட்டு ம‌க்க‌ளில் ஒரு பிரிவின‌ர் இன‌வெறியுட‌ன் கல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட்ட நேர‌ம் எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல் ஊக்குவித்த‌ அதிகார‌ வ‌ர்க்க‌ம், அதே ம‌க்க‌ள் வ‌ர்க்க‌ உண‌ர்வுட‌ன் அமைதி வ‌ழியில் போராடிய‌ நேர‌ம் அட‌க்குமுறை பிர‌யோகித்த‌து.

இத‌ன் மூல‌ம் சிறில‌ங்கா அர‌சு ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ விரும்பும் செய்தி இது தான்: "ம‌க்க‌ளே! தாராள‌மாக‌ இன‌வாத‌ம் பேசுங்க‌ள். இல‌ங்கையில் இன‌வாத‌ நோக்கில் நட‌த்த‌ப் ப‌டும் வ‌ன்முறைக‌ளுக்கு த‌ண்ட‌னை கிடையாது. ஆனால், நீங்க‌ள் வ‌ர்க்க‌ உண‌ர்வுட‌ன் உரிமைக‌ளைக் கேட்டால் அட‌க்கி ஒடுக்க‌ப் ப‌டுவீர்க‌ள்."

ஆக‌வே, நீங்க‌ள் உரிமைக‌ள‌ற்ற முட்டாள்த‌ன‌மான‌ இன‌வாதிக‌ளாக‌ இருக்க‌ப் போகிறீர்க‌ளா? அல்ல‌து, உரிமைக‌ளுக்காக‌ போராடும் த‌ன்மான‌முள்ள‌ வ‌ர்க்க‌வாதிக‌ளாக‌ இருக்க‌ப் போகிறீர்க‌ளா? முடிவு உங்க‌ள் கைக‌ளில்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட