முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாஜி இந்தியாவின் அடுத்த அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்!


இதோ நாஜி இந்தியாவின் அடுத்த கட்ட அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்!

இது அசாமில் தங்கியுள்ள பங்களாதேஷ் குடியேறிகளுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த தடுப்பு முகாம்கள் நாளைக்கு நாடு முழுவதும் கட்டப் படலாம். தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளும் அதற்குள் அடைக்கப் படலாம். அது மட்டுமல்ல, நாளைக்கு அரசு நினைத்தால், யாரை வேண்டுமானாலும் ஏதாவதொரு சாட்டுக் கூறி குடியுரிமையை பறித்து தடுப்பு முகாமுக்கு அனுப்பலாம்.

அசாம் மாநிலத்தில் பல தசாப்தகாலமாக தங்கியிருந்து இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்த தொழிலாளர்களைத் தான், பாஜக நாஜிகளின் கொடுங்கோல் அரசு ஈவிரக்கமின்றி தடுப்பு முகாமிற்கு அனுப்புகிறது. ஏழை பாமரத் தொழிலாளர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரச ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தை காட்டி, தடுப்பு முகாமுக்குள் அடைத்து வைக்கவிருக்கிறது.

இவ்வாறு தான் நாஜி ஜெர்மனியின் அடக்குமுறை ஆட்சி ஆரம்பமாகியது. பிரெஞ்சு, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜெர்மனியில் குடியேறியவர்கள் ஜெர்மன் குடியுரிமை பெறும் வாய்ப்பை இல்லாதொழித்தது. அப்படியான "சட்டவிரோத குடியேறிகளுக்காகவே" தடுப்பு முகாம்கள் கட்டப் படுவதாக ஒரு நியாயம் கூறியது. பிரஜாவுரிமை என்பது பிறப்பின் அடிப்படையிலானது என்று சட்டத்தை மாற்றியமைத்தது. அதைத் தான் பாஜக நாஜிகளின் அரசு இந்தியாவில் செய்கிறது.

நாஜி அரசினால் ஜெர்மன் யூதர்களின் குடியுரிமை பறிக்கப் பட்ட போதிலும், அவர்களை எடுத்தவுடனே தடுப்பு முகாம்களுக்கு அனுப்பவில்லை. முதலில் "கெட்டோ" எனும் குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட பிரதேசத்திற்குள் மட்டும் வாழும் வகையில் அவர்களது நடமாட்டம் கட்டுப் படுத்தப் பட்டது. யூதர்களுக்கு முன்னரே கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் போன்ற "விரும்பத்தகாத பிரஜைகளின்" குடியுரிமை பறிக்கப் பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர்.

குடியுரிமை பறித்தலும், தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்தாலும் இறுதியில் இனப்படுகொலையில் சென்று முடிந்தது என்பது வரலாறு. உண்மையில், அன்றைய காலகட்டத்தில் "Endlösung" எனப்படும் இனப்படுகொலை குறித்த தீர்மானம் எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அது வரையில் தடுப்பு முகாம்கள் தேசப் பாதுகாப்புக்கு அவசியமானவை என்று தான் ஜெர்மன் மக்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

நான் ஸ்ரீலங்கன் இல்லை.... நான் தமிழீழன் இல்லை....

நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. நான் இந்தியன் இல்லை. நான் பிரித்தானியன் இல்லை. உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள். தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள். முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள். நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. - கலையரசன் 16-05-2020