முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காஷ்மீர் & ஈழம் : தீராத் துயரை பகிர்தல்


காஷ்மீரில் ஒரு கிராமத்தில், இந்திய இராணுவம் வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் அனைவரையும் பிடித்து வந்து, ஒரு பொது இடத்தில் இருத்தி வைத்திருக்கும் காட்சி.

1987 ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்த எனக்கும் இதே மாதிரியான அனுபவம் கிடைத்தது. அப்போது எங்களது கிராமத்தை சுற்றிவளைத்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் எல்லோரையும் வெளியே வரச் சொன்னார்கள். எங்கள் எல்லோரையும் அங்கிருந்த ஆரம்பப் பாடசாலை முற்றத்தில் அமர வைத்தார்கள். பின்னர் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தார்கள்.

அந்த இராணுவ முகாமும் ஒரு பாடசாலைக் கட்டிடம் தான். எங்களை எல்லாம் வகுப்பறை மண்டபங்களில் வெறும் தரையில் படுக்க வைத்தார்கள். அப்போது அவர்கள் இரவுணவாக தந்த காய்ந்து போன சப்பாத்தியும், தண்ணீர் மாதிரியான சாம்பாரும் இப்போதும் நினைவில் உள்ளது. அடுத்த நாள், சந்தேகத்திற்கிடமான ஒரு சிலரை மட்டும் தடுத்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுதலை செய்தார்கள்.

எங்கள் ஊரில் இருந்த பெரும்பாலான வீடுகளில் அன்று பெண்கள் மட்டும் தனியாக இருந்தார்கள். அனேகமாக பதினைந்து முதல் நாற்பது வரையிலான ஆண்கள் அனைவரையும் பிடித்துச் சென்று விட்டார்கள். ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு செல்வது மாதிரி, முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய படையினர் எங்களை இரண்டு கிலோமீட்டர் நடத்திக் கூட்டிச் சென்றார்கள்.

அன்று நாங்கள் அனுபவித்த வலிகளை இன்று காஷ்மீரி சகோதரர்கள் அனுபவிப்பதைக் காணும் பொழுது மனம் கனக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும் பொழுது, காஷ்மீருக்கும் ஈழத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

நான் ஸ்ரீலங்கன் இல்லை.... நான் தமிழீழன் இல்லை....

நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. நான் இந்தியன் இல்லை. நான் பிரித்தானியன் இல்லை. உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள். தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள். முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள். நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. - கலையரசன் 16-05-2020