முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்று குலாக் சிறை முகாம் இன்று பெரும் நகரம்


இது முன்னாள் சோவிய‌த் குடிய‌ர‌சான‌ க‌ச‌க‌ஸ்தான் நாட்டில் உள்ள‌ க‌ர‌க‌ன்டா (Karaganda) ந‌க‌ர‌ம். இது ஸ்டாலின் கால‌த்தில் குலாக் (Gulag) சிறை முகாமாக‌ இருந்த‌து என்றால் ந‌ம்ப‌ முடிகிற‌தா? கிட்ட‌த்த‌ட்ட‌ குவைத் நாடு அள‌வு ப‌ர‌ப்ப‌ள‌வை கொண்ட‌, வெறும் புல்த‌ரை நில‌த்தில் அமைக்க‌ப் ப‌ட்ட‌ குலாக் முகாம்க‌ளில், இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ "வ‌ர்க்க‌ விரோதிக‌ளை" கொண்டு வ‌ந்து த‌டுத்து வைத்திருந்த‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் க‌டும் உழைப்பினால் க‌ட்டியெழுப்பிய‌து தான் இந்த‌ப் பிர‌மாண்ட‌மான‌ ந‌க‌ர‌ம். நில‌க்க‌ரி சுர‌ங்க‌ம் பிர‌தான‌மான‌ தொழிற்துறையாக‌ இருந்தது.

ஆர‌ம்ப‌ கால‌த்தில் நிலைமை மோச‌மாக‌த் தான் இருந்த‌து. க‌ட்டாய‌ வேலை, உண‌வுப் ப‌ற்றாக்குறை எல்லாம் இருந்த‌து. ஆனால் அது இர‌ண்டாம் உல‌க‌ப் போர் முடியும் வ‌ரை தான்.

அப்போது குலாக் முகாம்களில் குறிப்பிடத்தக்க அளவு "போர்க் கைதிகளும்" இருந்தனர். உலகப் போரில் "ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டையெடுப்பாள‌ர்க‌ளை ஆத‌ரித்தார்க‌ள்" என்ற‌ குற்ற‌ச்சாட்டில், சோவிய‌த் மேற்குப் பிர‌தேச‌ங்க‌ளில் இருந்து வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ங்க‌ளையும் க‌ர‌க‌ண்டாவில் தான் மீள்குடியேற்ற‌ம் செய்திருந்த‌ன‌ர்.

கால‌ப்போக்கில் மெல்ல‌ மெல்ல‌ க‌ர‌க‌ண்டா ந‌க‌ர‌ம் க‌ட்டியெழுப்ப‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர், முன்னாள் சிறைக் கைதிக‌ள், அதாவ‌து வ‌ர்க்க‌ எதிரிக‌ளும் ந‌ன்மை அடைந்த‌ன‌ர். பொருளாதார‌ முன்னேற்ற‌ம் கார‌ண‌மாக‌ ப‌ல‌ர் "தாய‌க‌ம் திரும்ப‌ ம‌ன‌மின்றி" அங்கேயே த‌ங்கி விட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து வ‌ம்சாவ‌ளியின‌ர் க‌ர‌க‌ண்டாவை புதிய‌ தாய‌க‌மாக‌ ஏற்றுக் கொண்டு விட்ட‌ன‌ர்.

ஸ்டாலின் கால‌த்தில், ர‌ஷ்ய‌ர்க‌ள், ஜேர்ம‌னிய‌ர்க‌ள், உக்ரைனிய‌ர்க‌ள், போலிஷ், என்று ப‌ல்வேறு இன‌ங்க‌ளை சேர்ந்த‌ ம‌க்க‌ள் இட‌ம்பெய‌ர்க்க‌ப் ப‌ட்டு க‌ர‌க‌ண்டாவில் மீள்குடியேற்ற‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். இப்போதும் அங்கே குறைந்த‌து 50 தேசிய‌ இன‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ள் வாழ்கிறார்க‌ள். சோவிய‌த் யூனிய‌னின் வீழ்ச்சியின் பின்ன‌ர் பெரும‌ள‌வு ஜேர்ம‌ன் இன‌த்த‌வ‌ர்க‌ள் ஜேர்மனிக்கு புல‌ம்பெய‌ர்ந்து விட்ட‌ன‌ர்.


- கலையரசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட