முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஷ்காஷிம் - ஒரு நகரம், இரண்டு கதைகள்

ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் இஷ்காஷிம் (Ishkashim). 19 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரிட்டிஷ், ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டி காரணமாக இரண்டாகப் பிரிக்கப் பட்டது. ஒரு ஆற்றுக்கு வடக்கே இருந்த பகுதி ரஷ்யாவுடனும், தெற்கே இருந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனும் சேர்க்கப் பட்டது.

அதற்குக் காரணம், அன்றைய காலத்தில் காலனிய விஸ்தரிப்பில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் இந்தியாவும், ரஷ்ய சாம்ராஜ்யமும் ஒரே எல்லையில் சந்தித்துக் கொண்டன. இரண்டு சாம்ராஜ்யங்களுக்கும் இடையிலான நீண்ட எல்லைப் பகுதி தனியாக பிரிக்கப் பட்டு, ஆப்கானிஸ்தானுடன் இணைக்கப் பட்டது. இதற்காக அங்கு வாழ்ந்த மக்களின் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை. ஒரே கிராமங்கள் ஒரே இரவில் இரண்டாகப் பிரிக்கப் பட்டன.

அவ்வாறு பாதிக்கப் பட்ட பகுதி தான் இஷ்காஷிம். தாஜிக்கி மொழியுடன் தொடர்புடைய கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர். கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக, ஒரே நகரத்து மக்கள் இரண்டு வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஒரு ஆறு மட்டுமே அவர்களைப் பிரிக்கிறது. ஒரு பாலம் மட்டுமே அவர்களை இணைக்கிறது. வாரத்திற்கு ஒரு தடவை கூடும் சந்தையில், இரு பக்கத்து மக்களும் கலந்து கொள்வார்கள். அவ்வளவு தான். மற்றும் படி வேறெந்த பொதுவான தொடர்புகளும் கிடையாது.

ரஷ்ய சாம்ராஜ்யம் வீழ்ந்து அங்கு ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தது. அதனால், தாஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த இஷ்காஷிம் நகரம், புதிதாக தோன்றிய சோவியத் யூனியனின் பகுதியானது. அதுவே சோவியத் ஒன்றியத்தின் தெற்கில் உள்ள கடைசி நகரம். ஆகையால், சோஷலிசம் கொண்டு வந்த மாற்றங்கள் அங்கேயும் கிடைக்கும் வகை செய்யப் பட்டது. மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டன.

சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர், தாஜிகிஸ்தான் தனியான குடியரசானது. இருப்பினும் சோவியத் காலத்து கட்டுமானம் இப்போதும் அங்கே இயங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். இன்னமும் அங்கே லெனின் சிலை உள்ளது. "தங்கள் வாழ்வில் ஒளியேற்றிய மகான்" என்று உள்ளூர் மக்கள் இப்போதும் லெனினுக்கு மரியாதை செலுத்துகின்றனர். (நம்பாதவர்கள் நேரில் சென்று பார்க்கலாம்.)

இன்றைக்கும் தாஜிக் - இஷ்காஷிம் பிள்ளைகள் சோவியத் காலத்து சீருடையுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். பள்ளிக்கூடங்கள் ஒழுங்காக நடக்கின்றன. கல்வி கற்க வேண்டிய வயதில் உள்ள மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். தற்போதுள்ள தாஜிகிஸ்தான் ஒரு முதலாளித்துவ நாடு தான். இருப்பினும், கம்யூனிசம் கொண்டு வந்த சமுதாய மாற்றங்கள் அப்படியே உள்ளன. இஸ்லாமியவாதக் குழுக்களை தவிர வேறு யாரும் அதற்கு எதிரானவர்கள் அல்ல.

ஒரு கிலோ மீட்டர் வித்தியாசம் கூட இல்லாத தூரத்தில் உள்ள ஆப்கான்- இஷ்காஷிம் நகரத்தில் இன்னமும் ஒழுங்கான மருத்துவமனையோ, பள்ளிக்கூடமோ கிடையாது. அங்கிருக்கும் ஒன்றிரண்டு பாடசாலைகளில் மாணவர் வருகையும் குறைவு. பல சிறுவர்கள், ஏழ்மை காரணமாக, படிக்க வேண்டிய வயதில் ஆடு மேய்க்கிறார்கள். அங்குள்ள மக்களின் வாழ்க்கை ஒரு நூறாண்டுக்கு முன்னர் இருந்த மாதிரியே இப்போதும் உள்ளது.

கம்யூனிசம் எவ்வளவு "கொடுமையானது" என்று இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் மக்களே! ஆடு மேய்க்க வேண்டிய சிறுவர்களை பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைக்கலாமா? மதவாதம், இனவாதம், தேசியவாதம் பேசினால் தானே மக்களை மந்தைகளாக வைத்திருக்கலாம்?

- Kalaiyarasan

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட