முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வட கொரியாவில் இந்த அழகான வீடு முற்றிலும் இலவசம்!


வட கொரியாவில் இந்த அழகான வீடு உங்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. வாடகையும் அதிகமில்லை. இரண்டு மாதம் வாடகை கட்டவில்லை என்ற காரணத்திற்காக யாரும் உங்களைப் பிடித்து தெருவில் விட மாட்டார்கள். இங்கே "வாடகை" என்பது பராமரிப்பு செலவுகளுக்கானது. பெரும்பாலும் புதிய வீட்டுமனைகள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்பதால் பராமரிப்புச் செலவுகளும் அதிகம். அது அங்கு குடியிருக்கும் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

தொண்ணூறுகளுக்கு முன்னர் வட கொரியாவில் சோஷலிச அமைப்பு இருந்த காலத்தில் எழுதப்பட்ட சட்டம் இப்போதும் அமுலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தனியாக வீடு கிடைப்பதற்கான வசதிகளை அரசே செய்து கொடுக்கும். ஒரு குடும்பம் புதிய வீடொன்றுக்கு குடிபுகும் பொழுது "ipsajung" (குடிபுகுந்த பத்திரம்) எனும் பத்திரம் வழங்கப் படும்.

ipsajung பத்திரத்தில் "வசிப்பதற்கான அனுமதி" என்று தான் எழுதப் பட்டுள்ளது. ஆனால் காலாவதியாகும் திகதியோ, அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தமோ அல்ல. ஆகையினால் மக்கள் தாம் "சொந்த வீட்டில்" வசிப்பதாக நம்பி வந்தனர். இன்று வரையில் யாரும் வீட்டை விட்டு வெளியேற்றப் படவில்லை என்பதால், மக்கள் அப்படி நம்பியதிலும் தவறில்லை.

முன்பிருந்த சோஷலிச காலகட்டத்தில் யாரும் தாம் குடியிருக்கும் வீட்டை விற்க முடியாது. ஏதாவது தேவையென்றால் இன்னொருவருடன் வீட்டை மாற்றிக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இருவரும் நகரசபைக்கு சென்று பத்திரத்தில் உள்ள பெயரை மாற்றிக் கொண்டால் அது சட்டப்படி செல்லுபடியாகும்.

தற்காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் வந்த பின்னர் வீடுகளை வாங்குவதும் விற்பதும் அதிகரித்து வருகின்றது. பியாங்கியாங் நகரில் ஒரு இலட்சம் யூரோக்களும் வீடு விற்பனைக்கு விடப் படுகிறது. ஆனால், வட கொரியாவின் வீட்டு உரிமைச் சட்டம் மாற்றப் படாத காரணத்தால், வீடு விற்பதும், வாங்குவதும் சில நேரம் எதிர்காலத்தில் சட்ட ரீதியான பிரச்சனைகளை கொண்டு வரலாம். இருப்பினும், தற்போதைய வட கொரிய அரசாங்கம், முதலாளித்துவ நடவடிக்கைகளை கண்டும் காணாத மாதிரி விட்டுக் கொடுப்பதால், பலர் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...